கரூர் மாவட்டத்தில் 16 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.


கரூர் மாவட்டத்தில் 16 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
x
தினத்தந்தி 18 Sep 2021 6:57 PM GMT (Updated: 18 Sep 2021 6:57 PM GMT)

கரூரில் 16 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

கரூர்,
கரூர் மாவட்டத்தில் 16 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
பணியிட மாற்றம்
கரூர் மாவட்டத்தில் 16 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கரூர் தாசில்தாராக ஆர்.மோகன்ராஜ் நியமிக்கப்பட்டு உள்ளார். கரூர் தமிழ்நாடு மாநில வாணிபக்கழக (சில்லரை விற்பனை) உதவி மேலாளராக சக்திவேல், குளித்தலை தாசில்தாரராக ஆர்.விஜயா, குளித்தலை சமூக பாதுகாப்புத்திட்ட தாசில்தாரராக கலியமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு மாநில வாணிபக்கழக மேற்பார்வை அலுவலராக (கலால்) வேலுச்சாமி, கிருஷ்ணராயபுரம் தாசில்தாரராக வெங்கடேசன், குளித்தலை காவிரி (கட்டளை) தெற்கு வெள்ளாறு இணைப்பு கால்வாய் திட்டம் அலகு 2 தனி தாசில்தாரராக (நிலம் எடுப்பு) மகுடீஸ்வரன், மாவட்ட கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை தனி தாசில்தாரராக ராஜசேகரன், கரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தனி தாசில்தாரராக அருள் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
புகளூர், கடவூர்
புகளூர் தாசில்தாரராக மதிவாணன், கரூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாரராக செந்தில்குமார், கரூர் காவிரி (கட்டளை) தெற்கு வெள்ளாறு இணைப்பு கால்வாய் திட்டம் தனி மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் தாசில்தாரராக ஈஸ்வரன், கடவூர் தாசில்தாரராக ராஜாமணி, கரூர் நகர நிலவரித் திட்ட தனி தாசில்தாரராக  வித்யாவதி, கரூர் வட்ட சாலை அலகு 1 தனி தாசில்தாராக (நிலம் எடுப்பு) பழனியும், கிருஷ்ணராயபுரம் காவிரி கட்டளை தெற்கு வெள்ளாறு இணைப்பு கால்வாய் திட்டம் அலகு 1 தனி தாசில்தாரராக (நிலம் எடுப்பு) செந்தில் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

Next Story