மது விற்ற 4 பேர் கைது
மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உடையார்பாளையத்தை சேர்ந்த பிரபு(வயது 40), சூரியா(22), தத்தனூர் குடிக்காடு கிராமத்தை சேர்ந்த உலகநாதன்(45), வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன்(45) ஆகியோர் அப்பகுதியில் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story