நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 49 பேருக்கு கொரோனா


நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 49 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 Sep 2021 6:08 PM GMT (Updated: 21 Sep 2021 6:08 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 49 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 50,102 ஆக அதிகரித்து உள்ளது.

நாமக்கல்:
49 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 50 ஆயிரத்து 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 4 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்து 53 ஆக அதிகரித்தது.
இதற்கிடையே நேற்று புதிதாக 49 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 102 ஆக அதிகரித்து உள்ளது.
547 பேருக்கு சிகிச்சை
இந்த நிலையில் நேற்று 62 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 49 ஆயிரத்து 73 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 482 பேர் பலியான நிலையில், 547 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் 3&வது அலையை தடுக்கும் வகையில் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Next Story