அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்


அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
x
தினத்தந்தி 21 Sep 2021 7:06 PM GMT (Updated: 21 Sep 2021 7:06 PM GMT)

திருவாரூரில் இருந்து ஒசூருக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூர், செப்.22-
திருவாரூரில் இருந்து ஒசூருக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
பொது வினியோக திட்டத்தின்கீழ்
திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து சம்பா அறுவடை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நெல் மூட்டைகள் பொது வினியோக திட்டத்தின் கீழ் அரிசியாக வழங்கிட மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கூடுதலான நெல் மூட்டைகள் சரக்கு ரெயில்கள் மூலம் பிற மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
2 ஆயிரம் டன் நெல்
அதன்படி நேற்று திருவாரூரை சுற்றி உள்ள பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள், 160 லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலைத்திற்கு கொண்டு வரப்பட்டது. 
அங்கு லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை தொழிலாளர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர். பின்னர் 50 பெட்டிகளில் ஏற்றப்பட்ட 2 ஆயிரம் டன் சன்னரக நெல் திருவாரூரில் இருந்து ஒசூருக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

Next Story