புளியஞ்சோலையில் மரங்களை வெட்டியவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்


புளியஞ்சோலையில் மரங்களை வெட்டியவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 21 Sep 2021 7:25 PM GMT (Updated: 21 Sep 2021 7:25 PM GMT)

புளியஞ்சோலையில் மரங்களை வெட்டியவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

உப்பிலியபுரம், செப்.22&
உப்பிலியபுரத்தை அடுத்த புளியஞ்சோலை வனத்துறை பகுதிகளில் வனக்காப்பாளர் கவாஸ்கர் தலைமையில் வனத்துறையினர் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கல்லாத்துக்கோம்பை வனத்துறை காப்புக்காட்டுப்பகுதியில், கொப்பம்பட்டியை சேர்ந்த சின்னதுரை (வயது 51) என்பவர் மரங்களை வெட்டிக்கொண்டிருந்தார். இதனையடுத்து அவரை பிடித்த வனத்துறையினர் அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Next Story