கிரேன் மோதி முதியவர் பலி


கிரேன் மோதி முதியவர் பலி
x
தினத்தந்தி 22 Sep 2021 7:03 PM GMT (Updated: 22 Sep 2021 7:03 PM GMT)

சிவகாசியில் கிரேன் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவகாசி, 
சிவகாசி அருகே உள்ள பாரைப்பட்டி திருப்பதி நகரை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 57). இவர் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வாங்கி கொண்டு சிவகாசி போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கிரேன் ஒன்று  முனியாண்டி மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் முனியாண்டி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அவரது மகன் வீரமணி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கிரேனை ஓட்டி வந்த அம்மன்கோவில்பட்டி பகுதியை சேர்ந்த துரைராஜ் மகன் விக்னேஷ்பாண்டியன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story