அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆவுடையார்கோவில்:
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு 3 மாத காலமாய் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஊதியம் வழங்கப்பட வில்லை. இதனால் தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் படும் துயரத்தை பல்கலைக்கழகத்துக்கு எடுத்துக் கூறும் வகையிலும், ஊதியத்தை வழங்கக்கோரி கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
Related Tags :
Next Story