கடையின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு


கடையின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 25 Sep 2021 7:37 PM GMT (Updated: 25 Sep 2021 7:37 PM GMT)

கடையின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு

திருச்சி, செப்.26&
திருச்சி கோட்டை நடுகுஜிலி தெருவை சேர்ந்தவர் ஜமால் முகமது (வயது 61). இவர் டைமண்ட் பஜாரில் பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த வியாபாரம் செய்துவருகிறார். சம்பவத்தன்று இவர் விற்பனை முடிந்ததும் இரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று முன்தினம் காலை வந்து பார்த்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, கல்லாவில் இருந்த ரூ.50 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.




Next Story