அனுமதியின்றி பட்டாசு கடத்தியவர் கைது


அனுமதியின்றி பட்டாசு கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 25 Sep 2021 8:13 PM GMT (Updated: 25 Sep 2021 8:13 PM GMT)

ஏழாயிரம் பண்ணை அருகே அனுமதியின்றி பட்டாசு கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

தாயில்பட்டி, 
ஏழாயிரம்பண்ணை பகுதியில்  சப்&இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது அதில் சரவெடிகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய போது அச்சங்குளம் கிராமத்தை சேர்ந்த பீட்டர் (வயது 60) என்பதும், அனுமதியின்றி பட்டாசுகளை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 20 கிலோ சரவெடிகள் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து, பீட்டரை கைது செய்தனர். 

Next Story