குடும்பம் நடத்த மனைவி வராததால் தீக்குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு


குடும்பம் நடத்த மனைவி வராததால் தீக்குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 26 Sep 2021 6:35 PM GMT (Updated: 26 Sep 2021 6:35 PM GMT)

தீக்குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

விராலிமலை:
விராலிமலை பகவான்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார். தொழிலாளி. இவரது மனைவி மாரிக்கண்ணு. இருவர்களுக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் மாரிக்கண்ணு, கணவரிடம் கோபித்து கொண்டு விராலிமலை அருகே தென்னலூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து சசிகுமார், மாரிக்கண்ணு வீட்டிற்கு சென்று அவரை அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த சசிகுமார் சம்பத்தன்று வீட்டிற்கு வந்து தனது மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் சசிகுமாரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சசிக்குமார் பரிதாபமாக இறந்தார். 

Next Story