கார் மீது கல் வீச்சு; 2 பேர் கைது


கார் மீது கல் வீச்சு; 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 Sep 2021 7:19 PM GMT (Updated: 26 Sep 2021 7:19 PM GMT)

நெல்லையில் கார் மீது கல் வீசியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
நெல்லை பேட்டை கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் முகமது நபில் (வயது 30). இவர் நேற்று மாலை தனது காரில் நெல்லை டவுன் ஆசாத் ரோட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
டவுன் வழுக்கோடை பகுதியில் சென்றபோது, அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த ஆசாத் தெருவை சேர்ந்த அப்துல்லா (22) மேல மவுண்ட் ரோடு பகுதியை சேர்ந்த ரபீக் (24) ஆகியோர் திடீரென முகமது நபிலின் காரின் பின்பக்க கண்ணாடியில் கல்வீசி தாக்கினர். இதில் காரின் கண்ணாடி உடைந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல்லா, ரபிக் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Related Tags :
Next Story