84 பேருக்கு கொரோனா


84 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 27 Sep 2021 4:51 PM GMT (Updated: 27 Sep 2021 4:51 PM GMT)

84 பேருக்கு கொரோனா

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 84 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 92 ஆயிரத்து 759-ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 107 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 880ஆக உள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 925 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 72 வயது மூதாட்டி ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 954 ஆக உயர்ந்துள்ளது.

Next Story