மாவட்டத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று


மாவட்டத்தில்  புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 28 Sep 2021 7:02 PM GMT (Updated: 28 Sep 2021 7:02 PM GMT)

புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தினமும் சராசரியை விட குறையாமல் உள்ளது. மாவட்டத்தில் நேற்று புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 ஆயிரத்து 707 ஆக அதிகரித்தது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் 13 பேர் குணமடைந்தனர். இதனால் கொரோனாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 85 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 216 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 406 ஆக உள்ளது.

Next Story