செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் ஆய்வு கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வு கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு சிறப்பு செயலாளரும், ஊரக உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளருமான சம்பத் தலைமை தாங்கினார். தேர்தல் பணிகள் குறித்து நியமிக்கப்பட்ட பொறுப்பு அலுவலர்களின் தேர்தல் பணி ஒதுக்கீடு தொடர்பான ஆய்வு நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பாலாஜி சுந்தரராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) எம்.ஆனந்தன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் காவல் கண்காணிப்பு குழுக்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story