நெல் கொள்முதல் மையம்


நெல் கொள்முதல் மையம்
x

தேவதானப்பட்டி அருகே நெல் கொள்முதல் மையத்தை கலெக்டர் முரளிதரன் திறந்து வைத்தார்.

தேனி : 

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. புதிய கொள்முதல் மையத்தை மாவட்ட கலெக்டர் முரளிதரன் திறந்து வைத்தார்.  

இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணகுமார், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் தணிகாசலம், துணை மேலாளர் அவ்வை மணி, பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் தங்கவேலு, கெங்குவார்பட்டி நகர தி.மு.க. செயலாளர் தமிழன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். 

விழா முடிவில் கலெக்டரிடம், கெங்குவார்பட்டி விவசாய சங்க பிரதிநிதிகள் மனு அளித்தனர். அதில் நெல் கொள்முதல் மையம் தற்போது வாடகை இடத்தில் செயல்பட்டு வருகிறது. அந்த பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான நூல் தோப்பு என்னுமிடத்தில் கொள்முதல் மையம் அமைக்க இடம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர். 

Next Story