தொழிலாளிக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது
தூத்துக்குடியில் தொழிலாளியை கத்தியால் குத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பிரம்மமுத்துவிளையைச் சேர்ந்தவர் பிரின்ஸ் (வயது 49). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று மாலை வேலை முடிந்து சோட்டையன்தோப்பு மதுக்கடையில் மது வாங்க வந்திருந்தார். அப்போது அங்கு இருந்த தூத்துக்குடி தாளமுத்துநகர் வெற்றிநகரைச் சேர்ந்த முனியசாமி (34), கீழ அழகாபுரியைச் சேர்ந்த ராமர் என்ற அழகுராமன் (31), தாளமுத்து நகர் இந்திரா நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் (20) ஆகியோா், பிரின்சிடம் மது வாங்கித் தரும்படி கேட்டனர். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
பின்னர் சோட்டையன் தோப்புக்கு வந்த பிரின்சை, அவர்கள் 3 பேரும் வழிமறித்து கத்தியால் குத்திக் கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் தாளமுத்துநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், முனியசாமி, அழகுராமன், சதீஷ்குமார் ஆகிய பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story