லாட்டரி சீட்டு விற்றவர் கைது


லாட்டரி சீட்டு விற்றவர் கைது
x
தினத்தந்தி 2 Oct 2021 7:34 PM GMT (Updated: 2 Oct 2021 7:34 PM GMT)

சிவகாசி பகுதியில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.

சிவகாசி

சிவகாசி கிழக்கு சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார் பழைய விருதுநகர் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இந்திராநகரை சேர்ந்த கணேசமூர்த்தி (வயது 35) என்பவர் லாட்டரி சீட்டு எண்களை எழுதி கேரள மாநில லாட்டரி சீட்டு என்று பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்து வந்துள்ளார். இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த துண்டுசீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.


Next Story