லாரியில் சரள் மண் கடத்தல்; 2 பேர் கைது
கடையம் அருகே லாரியில் சரள் மண் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடையம்:
கடையம்- பாவூர்சத்திரம் விலக்கு பகுதியில் கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் மற்றும் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் குண்டுக்கல் எடுத்துச் செல்வதற்கான அனுமதிச் சீட்டைப் பயன்படுத்தி முக்கூடலில் இருந்து அரியப்பபுரத்திற்கு சரள் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து முப்புலியூர் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த பரமசிவன் மகன் சிவன் வைத்திலிங்க ராஜா (வயது 28), புங்கம்பட்டி காமராஜர் நகரைச் சேர்ந்த முருகன் மகன் ராம்குமார் (25) இருவர் மீதும் கடையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். லாரியை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story