பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை


பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 3 Oct 2021 5:01 PM GMT (Updated: 3 Oct 2021 5:24 PM GMT)

பாப்பிரெட்டிப்பட்டி அருகே காதல் திருமணம் செய்த சில நாட்களில் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

பொம்மிடி,

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பாப்பம்பாடி காந்தி நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மகன் சரவணன் (வயது 26). இவர் அரூரில் உள்ள தனியார் தங்க நகைக்கடையில் வேலை செய்து வந்தார். அதே நகைக்கடையில் அரூரை சேர்ந்த ரகமத்துல்லா மகள் ரஷிதா பேகம் (23) என்பவரும் வேலை செய்து வந்தார். 

அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. காதல் ஜோடியினர் திருமணம் செய்து கொண்டு கடந்த 30-ந்்தேதி பாப்பிரெட்டிப்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டது தொடர்பாக ரஷிதா பேகத்தின் அக்காள் ரோஸ்மாவுக்கும், அவரது கணவர் அமானுல்லாவுக்கும் இடையே குடும்பத்திற்குள்  தகராறு ஏற்பட்டு வந்ததாக கடிதம் எழுதி வைத்துவிட்டு ரஷிதா பேகம் வீட்டு அருகில் இருந்த விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து பள்ளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆன சில நாட்களில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதால் அரூர் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story