மனைவியை தாக்கியதாக கணவர் கைது
மனைவியை தாக்கியதாக கணவர் கைது செய்யப்பட்டார்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள இளையபெருமாள் நல்லூர் காலனி தெருவை சேர்ந்தவர் வீராசாமி (வயது 36). இவருடைய மனைவி சரண்யா (வயது 26). சம்பவத்தன்று சரண்யா தனது தங்கைக்கு குழந்தை பிறந்ததால், குழந்தையை பார்க்க சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் சரண்யாவிற்கு, வீராச்சாமி போன் செய்து வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து வீட்டிற்கு வந்த சரண்யாவை, நீ யாரிடம் போனில் பேசுகிறாய் என்று வீராசாமி கேட்டு, திட்டி தாக்கி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சரண்யா ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சரண்யா கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து, வீராசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story