கார் மோதி 2 பேர் படுகாயம்


கார் மோதி 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 4 Oct 2021 5:29 PM GMT (Updated: 4 Oct 2021 5:29 PM GMT)

கார் மோதி 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

குளித்தலை
குளித்தலை அருகே உள்ள ஐநூற்றுமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 20). இவர் தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த குணசேகர் (26) என்பவருடன் குளித்தலைக்கு துக்ககாரியத்திற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சம்பவத்தன்று சென்று கொண்டிருந்தார். சாலையை கடப்பதற்காக குளித்தலை அருகே உள்ள வதியம் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் இருவரும் நின்று கொண்டு இருந்துள்ளனர். அப்போது அதே சாலையில் வந்த கார் சாலையோரம் நின்றிருந்த இவர்கள் மீது மோதியது. இதில் பிரசாந்த் மற்றும் குணசேகரன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் குணசேகர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story