நெல்லை, தென்காசியில் 21 பேருக்கு தொற்று


நெல்லை, தென்காசியில் 21 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 4 Oct 2021 9:28 PM GMT (Updated: 4 Oct 2021 9:28 PM GMT)

நெல்லை, தென்காசியில் 21 பேருக்கு தொற்று

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 976 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 48 ஆயிரத்து 332 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 214 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 430 பேர் பலியாகி உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் 2 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதுவரை 27 ஆயிரத்து 290 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 26 ஆயிரத்து 765 பேர் குணமடைந்து இருக்கின்றனர். 41 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 484 பேர் பலியாகி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 55 ஆயிரத்து 920 ஆக உள்ளது. நேற்று 13 பேர் உள்பட இதுவரை 55 ஆயிரத்து 346 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 169 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடியை சேர்ந்த 66 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் நேற்று இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 405 ஆக உள்ளது.

Next Story