மாவட்டத்தில் புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று


மாவட்டத்தில் புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 5 Oct 2021 6:59 PM GMT (Updated: 5 Oct 2021 6:59 PM GMT)

மாவட்டத்தில் புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 845 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 27 பேர் குணமடைந்தனர். இதனால் `டிஸ்சார்ஜ்' ஆனவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 231 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு தற்போது 202 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 412 ஆக உள்ளது.
ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்கு உட்பட்ட ராஜகுளத்தூரை சேர்ந்த 80 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

Next Story