திருமயம் அருகே மின்சாரம் பாய்ந்து தச்சு தொழிலாளி பலி


திருமயம் அருகே மின்சாரம் பாய்ந்து தச்சு தொழிலாளி பலி
x

திருமயம் அருகே மின்சாரம் பாய்ந்து தச்சு தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

திருமயம்:
திருமயம் அருகே உள்ள விராச்சிலை கருப்பர் கோவில் வீதியை சேர்ந்தவர் வெள்ளைகண்ணு (வயது 70). தச்சுதொழிலாளி. இவர், வீட்டின் ஒரு பகுதியில் தச்சு தொழில் பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மின் எந்திரம் உதவியுடன் மரப் பலகைகளை இழைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது வெள்ளை கண்ணு மீது மின்சாரம் பாய்ந்ததில் படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே வெள்ளை கண்ணு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பனையப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story