விபத்தில் முதியவர் பலி


விபத்தில் முதியவர் பலி
x
தினத்தந்தி 6 Oct 2021 6:08 PM GMT (Updated: 6 Oct 2021 6:08 PM GMT)

விபத்தில் முதியவர் பலியானார்.

காரைக்குடி, 
பள்ளத்தூர் போலீஸ் சரகம் வடகுடியை சேர்ந்தவர் அழகர்(வயது 69). இவர் வடகுடியிலிருந்து கோட்டையூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கோட்டையூர் அருகே செல்லும்போது சாலையின் ஓரமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வேன் நின்று கொண்டிருந்தது. அதனை அழகர் கடக்க முயன்றபோது திடீரென வேன் டிரைவர் கதவை திறக்க இருசக்கர வாகனத்தில் சென்ற அழகர் அதில் மோதி கீழே விழுந்தார். இதனால் அழகருக்கு பலத்த அடிபட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் அழகரை காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அழகர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பள்ளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story