75 பேருக்கு கொரோனா


75 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 7 Oct 2021 6:55 PM GMT (Updated: 7 Oct 2021 6:55 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் 75 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

திருப்பூர்
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா தொற்றும் குறைந்துள்ளது. பாதிப்பு உள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் 75 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் திருப்பூர், கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 577-ஆக உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 78 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்து 780-ஆக உள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 835 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2 பேர் நேற்று பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 962-ஆக உள்ளது.

Next Story