திருநாவலூர் அருகே வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


திருநாவலூர் அருகே வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 8 Oct 2021 4:40 PM GMT (Updated: 8 Oct 2021 4:40 PM GMT)

திருநாவலூர் அருகே வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


உளுந்தூர்பேட்டை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல் கட்டமாக திருநாவலூர், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் மற்றும் ரிஷிவந்தியம் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 6-ந் தேதி நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு அந்தந்த ஒன்றியங்களில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு தனி அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் முன்பும் வளாகத்திலும், நுழைவு பகுதியிலும் பலத்த  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

அந்த வகையில் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 208 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகள் திருநாவலூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கல்லூரியை சுற்றிலும் துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 47 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரியின் 2 நுழைவு வாயில்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு சுழற்சி முறையில் 2 பிரிவுகளாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story