நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்


நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 9 Oct 2021 8:21 PM GMT (Updated: 9 Oct 2021 8:21 PM GMT)

தளவாய்புரம் அருகே நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தளவாய்புரம், 
சேத்தூர் அருகே சுந்தரராஜபுரம் மேல தெருவை சேர்ந்தவர் குருசாமி (வயது 65). இவருக்கு சொந்தமான காடு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் உள்ள இடையூரணி பகுதியில் உள்ளது. இவரது காட்டில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக சேத்தூர் புறநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து  சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள்சாமி தலைமையில் போலீசார் குருசாமியின் காட்டிலுள்ள பம்புசெட் அறையில் சோதனை நடந்தது. அப்போது அங்கு திருட்டுத்தனமாக 9 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் இந்த நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து குருசாமியை கைதுசெய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story