வயலில் மாடு மேய்ந்த தகராறில் பெண்ணை தாக்கியவர் கைது


வயலில் மாடு மேய்ந்த தகராறில் பெண்ணை தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 10 Oct 2021 9:05 PM GMT (Updated: 10 Oct 2021 9:05 PM GMT)

வயலில் மாடு மேய்ந்த தகராறில் பெண்ணை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவர் செங்கோடன். இவருடைய மனைவி மல்லிகா(வயது 45). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த அந்தோணி (29) என்பவருக்கும் அருகருகே விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில் மல்லிகாவின் மாடு அருகில் உள்ள அந்தோணியின் வயலில் புகுந்து பயிரை மேய்ந்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மல்லிகாவை அந்தோணி தாக்கியுள்ளார். இது குறித்து மல்லிகா அரும்பாவூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அந்தோணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story