தூத்துக்குடியில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும்கூட்டம் வருகிற 27-ந் தேதி நடக்கிறது


தூத்துக்குடியில்  எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும்கூட்டம்  வருகிற 27-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 12 Oct 2021 10:04 AM GMT (Updated: 12 Oct 2021 10:04 AM GMT)

தூத்துக்குடியில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும்கூட்டம் வருகிற 27ந் தேதி நடக்கிறது

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ந் தேதி நடக்கிறது.
இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
குறைதீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ந் தேதி மாலை 4 மணிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கியாஸ் சிலிண்டர் வினியோகஸ்தர்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.
மனுக்கள்
எனவே எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். அவர்கள் தங்களது குறைகளை மனுவாக தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ நேரில் அளிக்கலாம். மேலும் நுகர்வோர்கள் பெயர் மாற்றம், புதிய எரிவாயு உருளை வழங்குவதில் காலதாமதம், எரிவாயு வினியோகஸ்தர்களின் சேவையில் குறைபாடுகள், டெபாசிட் தொகை திரும்ப பெறுதல், புதிய இணைப்பு கோரியதன் நிலை, எரிவாயு உருளைக்கான மானியம் உரிய வங்கி கணக்கில் உரிய காலத்தில் வரவு வைக்கப்படாமல் இருத்தல், எரிவாயு உருளையை வினியோகம் செய்யும் நபர்கள் மீது ஏதும் குறைபாடுகள் மற்றும் எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோரை பாதிக்கும் எந்த விதமான குறைகளையும் கூட்டத்தில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story