‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குடிநீர் வசதி வேண்டும்
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை ஹசன்சா பள்ளிவாசல் தெரு உள்ளது. இந்த தெருவில் பல்வேறு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக போதிய குடிநீர் வரவில்லை. இதனால் இந்த தெருவை சேர்ந்த மக்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தெரு மக்களுக்கு போதிய குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை ஹசன்சா பள்ளிவாசல் தெரு உள்ளது. இந்த தெருவில் பல்வேறு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக போதிய குடிநீர் வரவில்லை. இதனால் இந்த தெருவை சேர்ந்த மக்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தெரு மக்களுக்கு போதிய குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.
- அப்துல் காதர், அய்யம்பேட்டை.
சேறும், சகதியுமான சாலை
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மூத்தாகுறிச்சி பகுதியில் மதுக்கூர்- அதிராம்பட்டினம் சாலை உள்ளது. இந்த சாலையில் மண் சாலையாக காணப்படும் இந்த சாலை தற்போது சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-மூத்தாகுறிச்சி பகுதி மக்கள், பட்டுக்கோட்டை.
சேதமடைந்த மின்கம்பம்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா ஈச்சங்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் தற்போது சேதமடைந்து கான்கிரீட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்துகள் ஏற்படும் முன்பு சேதமடைந்து காணப்படும் மின்கம்பத்தை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-ஈச்சங்குடி மக்கள். பாபநாசம்.
Related Tags :
Next Story