ஆன்லைன் விளையாட்டு மூலம் தஞ்சை என்ஜினீயரிடம் ரூ.94 ஆயிரம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை


ஆன்லைன் விளையாட்டு மூலம் தஞ்சை என்ஜினீயரிடம் ரூ.94 ஆயிரம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 Oct 2021 6:57 PM GMT (Updated: 13 Oct 2021 6:57 PM GMT)

ஆன்லைன் விளையாட்டு மூலம் தஞ்சை என்ஜினீயரிடம் ரூ.94 ஆயிரம் மோசடி

தஞ்சாவூர்:-

தஞ்சை அருகே உள்ள அற்புதாபுரத்தை சேர்ந்தவர் ஜெரால்டு (வயது 27). என்ஜினீயர். இவருடைய செல்போனுக்கு ஒரு தகவல் வந்தது. அதில் வீட்டிலிருந்து பகுதி நேரமாக பணியாற்றி வருவாய் ஈட்டலாம் என்ற தகவல் வந்தது. அதைத் திறந்து பார்த்தபோது, ஒரு தொடர்பு வாட்ஸ்அப் எண்ணுக்கு சென்றது.அதைத்தொடர்ந்து, தகவல் பரிமாற்றங்கள் (சாட்டிங்) நடைபெற்றது. அப்போது, அதில் வந்த ஒரு தகவலின் அடிப்படையில் தனது செல்போன் எண்ணை அளித்து பதிவு செய்தார். அதைத்தொடர்ந்து, வந்த ஆன்லைன் விளையாட்டில் இணையவழியில் பண பரிவர்த்தனை நடைபெற்றது. அப்போது இரண்டு முறை இணையவழியில் பரிவர்த்தனை செய்த தொகை திரும்பி வந்தது. மூன்றாவது முறையாக செலுத்திய ரூ.93 ஆயிரத்து 958 திரும்ப வரவில்லை. இது குறித்து ஜெரால்டு வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது 4-வது முறை விளையாட வேண்டும் என தகவல் வந்தது. ஆனால், அதில் கேட்கப்பட்ட தொகை லட்ச ரூபாய்க்கும் அதிகமாக இருந்ததால், ஏமாற்று வேலை என்பதை ஜெரால்டு அறிந்தார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெரால்டு தஞ்சை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கென்னடி உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story