தென்காசி மாவட்ட பஞ்சாயத்துக்குழுவை தி.மு.க. கைப்பற்றியது


தென்காசி மாவட்ட பஞ்சாயத்துக்குழுவை  தி.மு.க. கைப்பற்றியது
x
தினத்தந்தி 13 Oct 2021 7:11 PM GMT (Updated: 13 Oct 2021 7:11 PM GMT)

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தென்காசி மாவட்ட பஞ்சாயத்துக்குழுவை தி.மு.க. கைப்பற்றியது. இதில் காங்கிரஸ் 3 வார்டுகளிலும், ம.தி.மு.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.

தென்காசி:
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தென்காசி மாவட்ட பஞ்சாயத்துக்குழுவை தி.மு.க. கைப்பற்றியது. இதில் காங்கிரஸ் 3 வார்டுகளிலும், ம.தி.மு.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.

மாவட்ட பஞ்சாயத்து

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
இதில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:-
1-வது வார்டு சந்திரலீலா (தி.மு.க.) - 28,430,
2-வது வார்டு மாரிமுத்து (தி.மு.க.) - 21,625,
3-வது வார்டு (ம.தி.மு.க.) -21,477,
4-வது வார்டு பி.சுதா (தி.மு.க.) -18,141,
5-வது வார்டு ராஜா தலைவர் (தி.மு.க.) 22,150,
6-வது வார்டு கனிமொழி (தி.மு.க.)- 9,219,
7-வது வார்டு பூங்கொடி (தி.மு.க.) -7,684,
8-வது வார்டு உதய கிருஷ்ணன் (காங்கிரஸ்) - 14,503,
9-வது வார்டு சாக்ரடீஸ் (தி.மு.க.) -16,945,
10-வது வார்டு முத்துலட்சுமி (தி.மு.க.) -18,770,
11-வது வார்டு சுப்பிரமணியன் (காங்கிரஸ்) - 15,122,
12-வது வார்டு தமிழ்ச்செல்வி (தி.மு.க.) - 17,782,
13-வது வார்டு சி.சுதா (காங்கிரஸ்), - 16,214,
14-வது வார்டு மைதீன் பீவி (தி.மு.க.) - 18,613.

தி.மு.க. கூட்டணி வெற்றி

மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில் 10 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று தனி பெரும்பான்மையைப் பெற்றது.
எனவே, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. இதில் அ.தி.மு.க.விற்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.

Next Story