தேர்தல் பணிக்கு வந்த அதிகாரி திடீர் சாவு


தேர்தல் பணிக்கு வந்த அதிகாரி திடீர் சாவு
x
தினத்தந்தி 13 Oct 2021 7:42 PM GMT (Updated: 13 Oct 2021 7:42 PM GMT)

ஆலங்குளத்தில் தேர்தல் பணிக்கு வந்த அதிகாரி திடீரென்று இறந்தார்.

ஆலங்குளம்:

திண்டுக்கல் திருநகரைச் சேர்ந்தவர் அருள் சேகரன் (வயது 65). ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரான இவர், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அத்தியூத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்திற்கு துணை தேர்தல் அலுவலராக நேற்று முன்தினம் வந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்த நிலையில் அங்குள்ள கடை ஒன்றில் டீக்குடிக்க சென்றார். அப்போது தனக்கு திடீரென்று நெஞ்சுவலிப்பதாக சக அலுவலர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து சக அலுவலர்கள் அவரை ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அருள் சேகரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிேரத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story