நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 62 பேருக்கு கொரோனா முதியவர் பலி
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. முதியவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. முதியவர் சிகிச்சை பலன்இன்றி இறந்தார்.
62 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 51 ஆயிரத்து 289 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது.
இதனால் நாமக்கல் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 51 ஆயிரத்து 291 ஆக அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று புதிதாக மேலும் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 353 ஆக அதிகரித்து உள்ளது.
முதியவர் பலி
இதற்கிடையே நேற்று 59 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 50 ஆயிரத்து 263 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 599 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 490 பேர் பலியாகி இருந்தனர். இதற்கிடையே நேற்று நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த திருச்செங்கோட்டை சேர்ந்த 74 வயது முதியவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதனால் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 491 ஆக அதிகரித்து உள்ளது.
Related Tags :
Next Story