ஓட்டல் தொழிலாளி தற்கொலை


ஓட்டல் தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 15 Oct 2021 7:37 PM GMT (Updated: 15 Oct 2021 7:37 PM GMT)

மூலைக்கரைப்பட்டி அருகே ஓட்டல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள சின்னமூலைக்கரை மேலத்தெருவைச் சேர்ந்தவர் சின்னதுரை (வயது 40). ஓட்டல் தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சிதகனி (38). கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சின்னதுரை தனது தந்தையுடன் வசித்து வந்தார். மேலும் அவருக்கு குடிபழக்கம் இருந்து வந்ததால் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று சின்னமூலைக்கரையில் உள்ள உய்காட்டு சுடலை கோவில் அருகே மரத்தில் சின்னதுரை  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story