தச்சம்பட்டு அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து வீடு தரைமட்டமானது. 3 பேர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


தச்சம்பட்டு அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து வீடு தரைமட்டமானது.  3 பேர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
x
தினத்தந்தி 17 Oct 2021 1:24 PM GMT (Updated: 17 Oct 2021 1:24 PM GMT)

தச்சம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் வீடு தரைமட்டமானது. 3 பேர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வாணாபுரம்

தச்சம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் வீடு தரைமட்டமானது. 3 பேர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நள்ளிரவில் வெடி விபத்து

திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு அருகில் உள்ள இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த அமிர்தராஜ் என்பவரின் மகன்கள் லியோபெலிக்ஸ் (வயது 25), அலெக்சாண்டர் (23). இவர்களின் உறவினர் ஜான்போஸ்கோ ((35). இந்த 3 பேரும் அமிர்தராஜுக்கு சொந்தமான தகர ஷீட் வீட்டில் நேற்று முன்தினம் இரவு தூங்கி கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. 

நள்ளிரவில் வீட்டில் திடீரெனப் பயங்கர ெவடி சத்தம் ேகட்டது. அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறின. வீட்டின் சுவர், மேற்கூரை ஆகியவை இடிந்து விழுந்து தரைமட்டமானது.
இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட ஜான்போஸ்கோ, லியோபெலிக்ஸ், அலெக்சாண்டர் ஆகியோர் படுகாயம் அடைந்து தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். அக்கம்பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து 3 பேரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தச்சம்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். திருவண்ணாமலை கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். 

சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

நாட்டு வெடி குண்டு

தச்சம்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் வனப்பகுதிகள் இருப்பதால், அதில் உள்ள மான், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக அப்பகுதிகளில் வசிப்போர் நாட்டு வெடி குண்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள்.

படுகாயம் அடைந்த 3 ேபரும் நாட்டு வெடி மருந்தைப் பயன்படுத்தியதால் வீட்டில் வெடி விபத்து ஏற்பட்டு இருக்கலாம். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.
வெடி விபத்தில் வீடு இடிந்து சேதமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
மேற்கண்ட சம்பவம் குறித்து வனத்துறையினரும், கியூ பிராஞ்ச் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story