புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று


புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 17 Oct 2021 5:58 PM GMT (Updated: 17 Oct 2021 5:58 PM GMT)

புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக நேற்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 21 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் 19 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனோரின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 434 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 174 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 413 ஆக உள்ளது.

Next Story