விவசாயி திடீர் சாவு


விவசாயி திடீர் சாவு
x
தினத்தந்தி 17 Oct 2021 6:23 PM GMT (Updated: 17 Oct 2021 6:23 PM GMT)

அருப்புக்கோட்டையில் வயலுக்கு மருந்து அடிக்க சென்ற விவசாயி திடீரென இறந்து கிடந்தார்.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை புளியம்பட்டி மயானம் அருகே விவசாய நிலத்தில் பயிர்களின் நடுவே அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு  டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடம்பன்குளத்தை சேர்ந்த விவசாயியான குமார் (வயது 40) என்பதும், கடந்த 4 நாட்களுக்கு முன்பு  பூச்சி மருந்து அடிக்க வந்த அவர் திடீரென இறந்து கிடந்ததும் தெரியவந்தது. மருந்து சேராமல் உயிர் இழந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Tags :
Next Story