சார்ஜா, துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.23½ லட்சம் தங்கம் பறிமுதல்


சார்ஜா, துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.23½ லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 19 Oct 2021 5:16 AM GMT (Updated: 19 Oct 2021 5:16 AM GMT)

சென்னை விமான நிலையத்தில் சார்ஜா, துபாயில் இருந்து கடத்திய ரூ.23½ லட்சம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சார்ஜா மற்றும் துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது 2 பேர் அவசரமாக விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல முயன்றனா்.

அவர்கள் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், 2 பேரையும் நிறுத்தி விசாரித்தனர். 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் இருவரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதித்தனர்.

அப்போது அவர்கள் இருவரும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனா். 2 பேரிடம் இருந்தும் ரூ.23 லட்சத்து 53 ஆயிரம் மதிப்புள்ள 466 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Next Story