வலிப்பு நோயால் அவதி: பெண் தூக்குப்போட்டு தற்கொலை


வலிப்பு நோயால் அவதி: பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 Oct 2021 5:31 AM GMT (Updated: 21 Oct 2021 5:31 AM GMT)

திருவள்ளூர் அருகே வலிப்பு நோயால் அவதிப்பட்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த செங்காடு குன்னத்தூர் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி நீலாவதி (வயது 50). இவர் கடந்த 10 ஆண்டுகளாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். அதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தும் குணமாகாததால், மனவேதனை அடைந்த அவர், நேற்று முன்தினம் தன் அறைக்குச் சென்று அங்கு இருந்த மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது கணவர் ராஜேந்திரன் மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து இறந்த நீலாவதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story