நகை, பணம் திருட்டு
திருப்பூரில மளிகை கடைக்காரர் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.
நல்லூர்
திருப்பூரில மளிகை கடைக்காரர் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
மளிகை கடைக்காரர்
தூத்துக்குடி மாவட்டம் சுப்பிரமணியபுரம் கல்கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி என்கிற ரவிச்சந்திரன் மனைவி சுடலைகனி. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இவர் குடும்பத்துடன் திருப்பூர் செரங்காடு பகுதியில் வசித்து வருகிறார். தம்பதியினருக்கு 1 மகள், 2 மகன்கள் உள்ளனர். இவர் அருகில் உள்ள கரட்டாங்காடு 6-வது மெயின் வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவரது ஊரில் கோவில் திருவிழா நடைபெறுவதால் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருவிழாவிற்கு சென்றுள்ளார்.
திருட்டு
மேலும் வீட்டில் வளர்த்து வரும் புறாவுக்கு உணவு வைக்க சொல்லி அருகில் இருந்த உறவினர் மகன் விக்னேஷிடம் கூறியுள்ளார். விக்னேஷ் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் புறாவுக்கு உணவு வைக்க வந்தார். அப்போது ரவிசந்திரன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. அதனை பார்த்து அதிர்ச்சிடைந்த விக்னேஷ் ஊருக்கு சென்ற ரவிச்சந்திரனிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நேற்று காலை ரவிச்சந்திரன் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 38ஆயிரம், 2 வெள்ளிக்கொடி, 2 வெள்ளி கொலுசு, 2 கிராம் தங்க மோதிரம் 1, என மொத்தம் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. ரவிச்சந்திரன் ஊருக்கு சென்றதை தெரிந்து கொண்ட ஆசாமிகள் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து நல்லூர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வீட்டின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
---
Related Tags :
Next Story