பெண் போலீசாருக்கு ஓட்டுனர் உரிமம் போலீஸ் ஐ.ஜி. வழங்கினார்


பெண் போலீசாருக்கு ஓட்டுனர் உரிமம் போலீஸ் ஐ.ஜி. வழங்கினார்
x
தினத்தந்தி 22 Oct 2021 6:12 PM GMT (Updated: 22 Oct 2021 6:12 PM GMT)

பெண் போலீசாருக்கு ஓட்டுனர் உரிமம் போலீஸ் ஐ.ஜி. வழங்கினார்

திருச்சி, அக்.23-
திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அறிவுரையின்பேரில் மத்திய மண்டலத்துக்குட்பட்ட 9 மாவட்டங்களில் பணிபுரியும் பெண் போலீசார் தங்கள் திறமை மற்றும் தகுதியை மேம்படுத்திக் கொள்ளவும், காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு பயிற்சியை முடித்த 51 பெண் காவலர்களுக்கு (திருச்சி-3, கரூர்-12, பெரம்பலூர்-3, அரியலூர்-13, திருவாரூர்-15, நாகப்பட்டினம்-5) ஓட்டுனர் உரிமம் பெற்று தரப்பட்டதுடன், அவர்களை அழைத்து பாராட்டி ஓட்டுனர் உரிமத்தை ஐ.ஜி. பாலகிருஷ்ணன் வழங்கினார். மேலும், பயிற்சி முடித்த பெண் காவலர்கள் மத்திய மண்டல ஐ.ஜி.யை வாகனத்தில் அமர வைத்து வாகனத்தை ஓட்டி காட்டினர். தற்சமயம் பயிற்சியில் 53 (திருச்சி-7, புதுக்கோட்டை-10, கரூர்-9, பெரம்பலூர்-7, அரியலூர்-8, தஞ்சை-15, நாகப்பட்டினம்-2) பெண் போலீசார் ஓட்டுனர் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

Next Story