பிராணிகள் நல ஆர்வலருக்கு கொலை மிரட்டல்


பிராணிகள் நல ஆர்வலருக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 22 Oct 2021 7:22 PM GMT (Updated: 22 Oct 2021 7:22 PM GMT)

பிராணிகள் நல ஆர்வலருக்கு கொலை மிரட்டல்

விருதுநகர்
விருதுநகர் குமராபுரத்தை சேர்ந்தவர் சுனிதா (வயது 37). பிராணிகள் நல ஆர்வலரான இவர் ஒரு மினி வேனில் 7 மாடுகள் இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்டதை அறிந்து பாண்டியன் நகர் பகுதியில் அந்த வேனை நிறுத்தச் சொல்லியுள்ளார். ஆனால் வேனில் இருந்த முனிப்பாண்டி மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் வேனை நிறுத்தினால் கொலை செய்துவிடுவோம் என சுனிதாவை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி சுனிதா கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன்நகர்போலீசார் போலீசார் முனிப்பாண்டி மற்றும் சதீஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story