மூங்கில்துறைப்பட்டு அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை


மூங்கில்துறைப்பட்டு அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 23 Oct 2021 5:04 PM GMT (Updated: 23 Oct 2021 5:04 PM GMT)

மூங்கில்துறைப்பட்டு அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை போலீசார் விசாரணை


மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ஆற்கவாடி நடுத்தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகள் பிரியதர்ஷினி(வயது 16). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.   

இந்தநிலையில் ஏழுமலைக்கும், அவரது மனைவி பூங்கொடிக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த பிரியதர்ஷினி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். பின்னர் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியதர்ஷினி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story