சலூன் கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை


சலூன் கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 23 Oct 2021 5:04 PM GMT (Updated: 23 Oct 2021 5:04 PM GMT)

திருச்செந்தூர் அருகே சலூன் கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டணம் சண்முகபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 54). இவரது மகன் ராஜா தினேஷ்குமார். இவர்கள் இருவரும் காயல்பட்டினம் சிங்கிதுறையில் சலூன் கடை நடத்தி வருகின்றனர். பெரியசாமி மனைவி சித்ரா மற்றும் மகன் திவாகர், மகள் திவ்யாவுடன் சாத்தான்குளம் அருகே உள்ள தவசியம்மாள்புரத்தில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வந்தார். பெரியசாமியும், மகன் தினேஷ்குமாரும் வாரம் ஒரு முறை தவசியம்மாள்புரம் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் பெரியசாமி மூல வியாதியால் அவதிப்பட்டு வந்தாராம். சம்பவத்தன்று வீட்டின் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் நயிலான் கயிற்றில் பெரியசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து திருச்செந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துஇருளன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story