வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 23 Oct 2021 9:34 PM GMT (Updated: 23 Oct 2021 9:34 PM GMT)

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகன் பஞ்சநாதமூர்த்தி (வயது 19). இவருக்கு காசநோய் இருந்து வந்ததாகவும், இதற்காக தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வந்ததாகவும், மேலும் அவருக்கு தீராத வயிற்று வலியும் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பஞ்சநாத மூர்த்தி திடீரென எழுந்து வீட்டில் இருந்து வெளியேறி அருணகிரிமங்கலம் சாலையில் உள்ள வேப்பமரத்தில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் அங்கு சென்று பஞ்சநாதமூர்த்தியின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் செல்லமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story