கொரோனாவுக்கு பெண்கள் உள்பட 3 பேர் பலி


கொரோனாவுக்கு பெண்கள் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 23 Oct 2021 9:40 PM GMT (Updated: 23 Oct 2021 9:40 PM GMT)

கொரோனாவுக்கு பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

அரியலூர்:

3 பேர் பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவரும், அரியலூர் மாவட்டத்தில் 4 பேரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 6 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 27, 55 வயதுடைய பெண்கள் 2 பேரும், 82 வயதுடைய ஆண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 260 ஆக உயர்ந்துள்ளது.
சிகிச்சை
ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 36 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 58 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story