செல்போன் கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை


செல்போன் கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 25 Oct 2021 10:33 PM GMT (Updated: 25 Oct 2021 10:33 PM GMT)

சங்கராபுரம் அருகே செல்போன் கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை திருமணமான 4 வது மாதத்தில் பரிதாபம்

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மகன் அஜித்குமார்(வயது 25). இவருக்கும் கடுவனூர் கிராமத்தை  சேர்ந்த சுப்பிரமணி மகள் கீர்த்தனா(19) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் சங்கராபுரம் அருகே உள்ள கள்ளிப்பட்டு கிராமத்தில் வசித்து வந்தனர். அஜித்குமார் புதுப்பாலப்பட்டு கிராமத்தில் சொந்தமாக செல்போன் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அஜித்குமார் வீட்டில் உள்ள மின் விசிறியில்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story