கார் மோதி ஒருவர் பலி


கார் மோதி ஒருவர் பலி
x
தினத்தந்தி 26 Oct 2021 7:02 PM GMT (Updated: 26 Oct 2021 7:02 PM GMT)

வெம்பக்கோட்டை அருகே கார் மோதி ஒருவர் பலியானார்.

தாயில்பட்டி, 
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 52). இவர் ஆலங்குளம்  செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் மடத்துப்பட்டி வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது வெம்பக்கோட்டை துணை மின் நிலையம் அருகில் சென்ற போது திருச்சியிலிருந்து வந்த  கார் இரு சக்கர வாகனம் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார், கார் டிரைவர் ராஜா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story